எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 29 September 2021

படித்ததில் பிடித்தவை (“பறவையும் குழந்தையும்” – இந்திரன் கவிதை)

 


*பறவையும் குழந்தையும்*

 

காலையில் கதவைத் திறந்தால்

பால்கனியில்

பறவையைக் காணோம்.

 

மௌனசாட்சியாய் தரையில்

இலவம் பஞ்சு போல்

அதன் ஒற்றை இறகு.

 

குனிந்து கையிலெடுக்கப்போன

என்னைப் பார்த்து

அலறியது குழந்தை.

 

சிறகுக்கு

தானியமும் தண்ணீரும்

வைக்கச் சொன்னது

குழந்தை.

 

மறுநாள் காலையில்

கதவைத் திறந்தால்

சிறகு எங்கோ

பறந்து போயிருந்தது..!

 

*இந்திரன்*

{*மிக அருகில் கடல்*

கவிதைத் தொகுப்பிலிருந்து.}

4 comments:

  1. சத்தியன்29 September 2021 at 16:38

    கவிதை அருமை.
    பாராட்டுகள் கவிஞருக்கு.

    ReplyDelete
  2. சீனிவாசன்29 September 2021 at 17:08

    மகிழ்ச்சி.

    ReplyDelete
  3. சுப்புலெஷ்மி29 September 2021 at 17:09

    Nice.

    ReplyDelete
  4. கெங்கையா29 September 2021 at 17:11

    கவிதை மிக அருமை.

    ReplyDelete