எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 30 July 2021

படித்ததில் பிடித்தவை (“பேச்சு” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*பேச்சு*

 

ஊருக்கு வந்த மகன்.

 

இரவு தாண்டிப்

போகிறது பேச்சு.

 

தான் தொலைந்த

நகரத்தைப் பற்றிச்

சொல்கிறான் மகன்.

 

அவன் தொலைத்த

கிராமத்தைப் பற்றிச்

சொல்கிறாள் அம்மா..!

 

*ராஜா சந்திரசேகர்*



4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சீனிவாசன்30 July 2021 at 07:34

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்30 July 2021 at 08:43

    அருமை.

    ReplyDelete
  4. செல்லதுரை30 July 2021 at 09:00

    கவிதை மிக அருமை.

    ReplyDelete