எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 10 July 2021

படித்ததில் பிடித்தவை (“நம்பும்படியாக...” – வண்ணதாசன் கவிதை)

 


*நம்பும்படியாக...*

 

காற்றைப் பார்த்தேன்

என்று சொன்னேன்.

நீங்கள் நம்பவில்லை.

 

சருகுகள் நகர்ந்தன

என்று சொன்னேன்.

நீங்கள் நம்பினீர்கள்.

 

எதையும் நம்பும்படியாகச்

சொல்ல வேண்டியதிருக்கிறது

உங்களுக்கு..!

 

*வண்ணதாசன்*




6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. சீனிவாசன்10 July 2021 at 09:11

    A peaceful mind
    can feel many things.

    ReplyDelete
  3. பிரபாகரன். R10 July 2021 at 09:13

    Superb.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்10 July 2021 at 11:54

    எதையும் அனுபவத்தால்
    உணராத வரையில்
    எதுவும் சமுதாயத்தில்
    ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

    ReplyDelete
  5. லதா இளங்கோ10 July 2021 at 17:30

    Face With Pleading Eyes.

    ReplyDelete