எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 17 July 2021

படித்ததில் பிடித்தவை (“பயணித்தல்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*பயணித்தல்*

 

பயணிப்பது

சுகமானதாக இருக்கிறது

என்ற வரி

என்னிடமிருந்தது.

 

நின்றுகொண்டே பயணிப்பது

கடுமையானதாக இருக்கிறது

என்ற வரி

அவரிடமிருந்தது.

 

ஒரு சீட் காலியாக

அவரை அமரச் சொன்னேன்.

 

இப்போது

என் வரிக்கு

அவர் மாறக்கூடும்..!

 

*ராஜா சந்திரசேகர்*




5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. செல்லதுரை17 July 2021 at 07:06

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்17 July 2021 at 08:34

    ஒருவரது
    கஷ்டத்தில்தான்
    இன்னொருவர்
    சுகம்.

    ReplyDelete
  4. சீனிவாசன்17 July 2021 at 10:17

    மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. தெய்வசிகாமணி17 July 2021 at 14:56

    அருமை.

    ReplyDelete