எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 29 July 2021

படித்ததில் பிடித்தவை (“விருந்தினர்” – ராஜா சந்திரசேகர் கவிதை)


 

*விருந்தினர்*

 

திட்டப்போகும்

அம்மாவை சமாளிக்க

பல பதில்களை

யோசித்து

பலமான ஒன்றைத்

தேர்ந்தெடுத்து

வீட்டிற்குள்

அடியெடுத்து

வைக்கிறாள் சிறுமி.

 

இப்படி

நெனைஞ்சி வந்து

நிக்கிறியே

பதறுகிறாள் அம்மா.

 

அது இல்லம்மா

மழைய விருந்தினரா

கூப்பிட்டுக்கிட்டு

வந்திருக்கேன்

சொல்கிறாள் மகள்.

 

மகளின் பதிலில்

பரவசமாகித்

திட்டுவதை

மறக்கிறாள் அம்மா..!

 

*ராஜா சந்திரசேகர்*



5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. நந்தகுமார்29 July 2021 at 08:17

    அருமை.

    ReplyDelete
  3. சீனிவாசன்29 July 2021 at 08:18

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்29 July 2021 at 08:34

    அருமை.

    ReplyDelete
  5. கெங்கையா29 July 2021 at 09:09

    கவிதை அருமை.

    ReplyDelete