எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 9 July 2021

படித்ததில் பிடித்தவை (“இருட்டறை” – அ.வெண்ணிலா கவிதை)

 


*இருட்டறை*

 

யுத்தம் பற்றி எனக்குத்

தெரிந்திருக்க

நியாமில்லைதான்.

ஆண்டுகளின்

புள்ளி விவரங்களாக்கப்பட்டு

பாட புத்தகங்களில்

யுத்தங்கள் வந்த பிறகே

பிறந்துள்ளேன் நான்.

 

விமானம் பறப்பதை

அருகில் பார்க்கவே

25 வருடங்கள் பிடித்த எனக்கு

வெடிகுண்டு வீசும்

விமானங்கள் பற்றிக்

கற்பனை செய்ய முடியவில்லை.

 

எட்டுக்கு எட்டடி

இருட்டறையில் வாழ்ந்து

பழகியுள்ள என்னால்

ஓரளவுக்கு

பதுங்கு குழிகளின்

அனுபவம் உணர முடிகிறது..!

 

*அ.வெண்ணிலா*




5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    அ. வெண்ணிலா
    (1971 ஆகஸ்ட் 10)
    தமிழ் இலக்கியத்தில்
    பதினைந்து ஆண்டுகளாக
    தீவிரமாக இயங்கி வரும்
    எழுத்தாளராவார்.
    திருவண்ணாமலை மாவட்டம்
    வந்தவாசியில் இருக்கும்
    அம்மையப்பட்டு கிராமத்தில்
    வாழ்கிறார்.
    தான் படித்த வந்தவாசி
    அரசு பெண்கள் மேனிலைப்
    பள்ளியிலேயே கணிதப்
    பட்டதாரி ஆசிரியராக
    பணியாற்றி வருகிறார்.
    கணிதப் பாடத்தில் இளநிலை
    பட்டம் பெற்ற இவர் பின்னர்
    உளவியலில் முதுநிலை,
    வணிகவியலில் முதுநிலை
    பட்டங்களை பெற்றதோடு
    தொடர்ந்து கல்வியியலில்
    முனைவர் பட்டத்தையும்
    பெற்றுள்ளார்.

    இவரது கணவர் மு.முருகேசும்
    தமிழ் இலக்கிய உலகின்
    கவனத்தை ஈர்த்து இயங்கிவரும்
    முக்கியமான கவிஞராக
    அறியப்படுகிறார்.

    பிள்ளைகள் : கவின்மொழி,
    நிலாபாரதி, அன்புபாரதி.

    அ. வெண்ணிலா அவர்கள்
    கவிஞர், சிறுகதை ஆசிரியர்,
    கட்டுரையாளர், நாவலாசிரியர்,
    ஆசிரியர், சிறு பத்திரிகை
    ஆசிரியர் என பன்முக
    ஈடுபாடுகளுடன் தமிழ் உலகில்
    இயங்கிவருகிறார்.
    பெண்ணியம் சார்ந்த
    கருத்துகளை முன்னெடுத்து
    இலக்கியம் படைத்து வருவது
    வெண்ணிலாவின்
    தனித்துவமாகும்.
    அன்றாட வாழ்வின்
    இன்னல்களை புனைவுகள்
    ஏதுமின்றி படைப்பாக்குவது
    இவரது ஆற்றலாகும்.
    இவர் எழுதிய படைப்புகள்
    ஆங்கிலம், மலையாளம், இந்தி
    என பல மொழிகளில்
    மொழிபெயர்ப்பாகி
    பலராலும் பாராட்டப்பட்டுள்ளன.
    நூல்கள் பல்வேறு
    பல்கலைக்கழகங்கள் மற்றும்
    கல்லூரி அளவிலான
    பாடத்திட்டங்களில் பாடமாகவும்
    இடம்பெற்றுள்ளன.
    2009-2010 ஆம் ஆண்டு காலத்தில்
    தமிழகத்தின் சமச்சீர் கல்வி
    பாடத்திட்டக் குழுவில்
    ஒருங்கிணைப்பாளராக
    பணியாற்றி புதிய பாடப்புத்தக
    உருவாக்கத்தில் பெரும்
    பங்களிப்பை வழங்கியுள்ளார்
    என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

    ReplyDelete
  2. கெங்கையா9 July 2021 at 15:56

    அருமையான கவிதை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்9 July 2021 at 15:57

    வீட்டிற்குள் பொத்தி
    வளர்க்கப்படும்
    பெண்களின்
    மனநிலையை
    மிக அழகாக
    வெளிப்படுத்துகிறார்
    கவிஞர்.

    ReplyDelete
  4. சீனிவாசன்9 July 2021 at 16:39

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  5. நரேந்திரன்11 July 2021 at 05:20

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை அருமை.

    ReplyDelete