எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 25 July 2021

படித்ததில் பிடித்தவை (“விடைபெறும்போது” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*விடைபெறும்போது*

 

பிறந்த நாளை குறிப்பிட்டு

என் வாழ்த்துக்கள் வரும் என்று

உற்சாகப்படுத்துங்கள்.

 

டீவியின் மேலிருக்கும்

பொம்மையை ரசியுங்கள்.

 

அதன் கண்கள் வழியே

உங்களைப் பாருங்கள்.

 

முதியவர்கள் இருப்பார்கள் எனில்

அவர்கள் வயதுக்குள்

போய் வாருங்கள்.

 

விடைபெறும்போது

நாய்க்குட்டியைத்

தடவிக்கொடுக்க

மறக்காதீர்கள்.

 

அது குரைக்குமெனில்

வீட்டின் பாதுகாப்பு கவசம்

எனப் பாராட்டுங்கள்.

 

நகை இல்லாத

கழுத்தைப் பார்த்து

துயரப்படுவதை தவிருங்கள்.

 

மீன் தொட்டி மீன்களிடம்

கடல் விசாரித்ததாய் சொல்லுங்கள்.

 

வாங்கிச் செல்லும் பொருளில்

உங்கள் பிரியத்தை

குறித்துவையுங்கள்.

 

விடை பெறும்போது

தூசி படிந்த கணங்களை

அசைபோடுங்கள்.

 

ஒன்றிரண்டு சுவாராஸ்யவங்களை

பொதுவான அலைவரிசையில்

பேசுங்கள்.

 

முக்கியமாக

விடைபெறும்போது

நீங்கள் முழுதாய்

விடைபெற்றுவிடாமல்

நினைவுகளின் நீட்சியாய்

லயமாய்

அங்கு சுற்றிவரும்படி

இருக்கப் பாருங்கள்..!

 

*ராஜா சந்திரசேகர்*

(19.06.2011 கல்கி இதழில் வெளியானது)




5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. செல்லதுரை25 July 2021 at 06:59

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்25 July 2021 at 09:21

    மிக அருமை.
    வாழ்வை ரசிக்க
    அற்புத யோசனைகளை
    வழங்கும் கவிதை.

    ReplyDelete
  4. Excellent!
    The real meditation is
    our presence of mind
    in every actions.
    The only language
    common to all over
    the world is
    Expression of Feelings.

    ReplyDelete
  5. ஸ்ரீகாந்தன்25 July 2021 at 12:02

    கவிதை அருமை.

    ReplyDelete