*அணில்*
“பிளாஸ்டிக் குழாயைப் பற்றி
மேலேறிச்
செல்கிறது.
சுவர்களின்
மேல் ஓடுகிறது
சருகுகள்
சரசரக்க.
மொட்டை
மாடியில் உலாத்துகிறது.
தண்ணீர்த்
தொட்டி மூடிமேல் நின்று
கீழுலகைக்
காண்கிறது.
ஆளரவம்
கேட்டதும்
சட்டெனத்
தாவிவிடும்
அணிலுக்குத்
தெரியும்
தனக்குரியது
மரம்
தானென..!”
*பெருமாள் முருகன்*
கவிதை அருமை.
ReplyDeleteஅருமை...அருமை...
ReplyDelete