எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 11 January 2021

படித்ததில் பிடித்தவை (“நேர்கோட்டுப் பயணம்” – சாமி கிரிஷ் கவிதை)

 

*நேர்கோட்டுப் பயணம்*

 

இரை பழகும் ஆட்டுக்குட்டி

இலைகளில் வரைகிறது

விதவிதமாய்த்

தன் பசியின் ஓவியங்களை..!

 

நடைபயிலும் குழந்தையின்

குறிப்பிட்ட எல்லைக்குள்ளான

பயணங்கள்

ஒருபோதும் அலுப்பதேயில்லை..!

 

எழுதக் கற்கும் சிறுமி

தீட்டுகிறாள்

ஒவ்வொரு எழுத்தும்

உருவான வரலாற்றை..!

 

முதல் முதலாய்

சமைக்கப் பழகும்

ஒருவன் உணர்கிறான்

இதுவரையிலான

தான் சுவைக்க

விரும்பிய சுவைகளை..!

 

*சாமி கிரிஷ்*


4 comments:

  1. J. Senthil Kumar11 January 2021 at 06:22

    நன்று.

    ReplyDelete
  2. நந்தகுமார்11 January 2021 at 07:18

    True wonders.

    ReplyDelete
  3. கெங்கையா11 January 2021 at 08:08

    மிக அருமை...

    ReplyDelete
  4. ஸ்ரீராம்11 January 2021 at 11:06

    எவற்றிலும் முதல் அனுபவம் எப்போதும் ஆனந்தமே!

    ReplyDelete