எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 24 December 2020

படித்ததில் பிடித்தவை (“கடைசி வகுப்பு” – கல்யாண்ஜி கவிதை)

 


*கடைசி வகுப்பு* 

 

இந்த தினத்தின்

முதல் வகுப்பு

எடுக்க வந்த ஆசிரியர்

முந்தைய தினத்தின்

கடைசி வகுப்பு

எழுத்து மிதக்கும்

கரும்பலகையை பார்க்கிறார்.

மிகுந்த தயக்கத்துடன்

ஒரு முந்திய தினத்தை

எல்லோரிடமிருந்தும் அழிக்கிறார்..!

 

*கல்யாண்ஜி*


2 comments:

  1. ஸ்ரீராம்24 December 2020 at 14:18

    பழையன கழிதலும்,புதியன புகுதலும் வாழ்வில் தவிர்க்க முடியாதது,வரவேற்க்கப் பட வேண்டியதும் கூட.

    ReplyDelete
  2. ஆசிரியரின் அந்த தயக்கம்தான் இந்த கவிதையை அழகாக்குகிறது.

    ReplyDelete