எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 14 December 2020

படித்ததில் பிடித்தவை (“சாவிலிருந்து” – வைகறை கவிதை)

 


*சாவிலிருந்து*

 

ஒரு தூக்குக் கயிறென

தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும்

மரணத்தின் கூண்டிற்குள்

இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த

எலியொன்று

இப்போது திறந்து விடப்படுகிறது

ஒரு கயிற்று சாக்கிற்குள்.

உயிரைக் கையில் பிடித்தபடி

ஓடுகிறது எலி

சாவிலிருந்து

சாவுக்குள்..!”

 

  *வைகறை*


1 comment:

  1. ஸ்ரீராம்14 December 2020 at 20:05

    சபலதத்தில்அற்பத்திற்கு ஆசைப்பட்டு மாட்டிக்கொண்டு விழிக்கும் மனிதர்களின் நிலையும் எலிக்கு நிகரானது தான்.

    ReplyDelete