எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 30 September 2014

குறுக்கே செல்லாத பூனை...


“காலையில் அலுவலகம்
செல்லும் வழியில்
முனையில் பெட்டிக்கடை
இருக்கும் நிகோடின் சந்தில்...
காலை உரசிக்கொண்டு
குறுக்கே சென்ற பூனை
என்ன நினைத்ததோ
பாதி தூரத்துக்குப்பின்
மேலே செல்லாமல்
வந்த வழியே திரும்பியது
மனதுக்கு நிம்மதி தந்தது...

அன்று அலுவலகம்
அப்படி ஒன்றும்
சுலபமாக இல்லை.

நிறைய சவால்கள்...
சமாளிக்க சற்று
சிரமமாகதான் இருந்தது.
நிறைவாகவே இல்லை
அன்றைய தினம்.

பூனை குறுக்கே
ஓடியிருந்தால்
அன்றைய தினம்
நிறைவாக இருந்திருக்குமோ
என நினைக்கத்தோன்றியது..!”

                                           -  K. அற்புதராஜு.

No comments:

Post a Comment