எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 24 January 2022

படித்ததில் பிடித்தவை (“சாயல்” – கல்யாண்ஜி கவிதை)


*சாயல்*

 

என் சின்ன வயதில்

சட்டையில்லாத அப்பா

எப்படியோ இருப்பார்.

அவருடைய தளர்ந்த இந்த வயதில்

சட்டை போட்டால் அப்பா

எப்படியோ இருக்கிறார்.

அப்படியே இல்லாமல் இருப்பதுதான்

அவருடைய சாயல் போல..!

 

*கல்யாண்ஜி*




6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    வண்ணதாசன்
    (பிறப்பு: 1946)
    என்ற புனைப்பெயரில்
    சிறுகதைகளும்,
    கல்யாண்ஜி என்ற
    புனைப்பெயரில்
    கவிதைகளும்
    எழுதுபவரின்
    இயற்பெயர்,
    சி.கல்யாணசுந்தரம்.
    இவர் தமிழ்நாடு,
    திருநெல்வேலியில்
    பிறந்தவர்.
    இவரது தந்தை
    இலக்கியவாதி
    தி. க. சிவசங்கரன் ஆவார்.
    இவர் தந்தையும்
    சாகித்ய அகாதமி விருது
    பெற்றவர்.
    நவீன தமிழ்ச் சிறுகதை
    உலகில் மிகுந்த கவனம்
    பெற்ற எழுத்தாளரான
    வண்ணதாசன்,
    தீபம் இதழில் எழுதத்
    துவங்கியவர்.
    1962 ஆம் ஆண்டில் இருந்து
    இன்று வரை தொடர்ந்து
    சிறுகதைகள் எழுதி வருகிறார்.
    இவரது 'ஒரு சிறு இசை'
    என்ற சிறுகதை நூலுக்காக
    இந்திய அரசின் 2016 ஆம்
    ஆண்டுக்கான
    சாகித்திய அகாதமி விருது
    கிடைத்தது.

    இவரது சிறுகதைகள்
    பல்கலைக்கழகங்களில்
    பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன.
    "இலக்கியச் சிந்தனை"
    உள்ளிட்ட பல முக்கிய
    விருதுகளைப் பெற்றிருக்கிறார்
    வண்ணதாசன்.
    2016 "விஷ்ணுபுரம் விருது"
    இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
    சூன் 10, 2018-ல் கனடா தமிழ்
    இலக்கியத் தோட்டம் எனும்
    அமைப்பு தமிழ்
    இலக்கியத்திற்கான வாழ்நாள்
    சாதனையாளர் விருதினை
    இவருக்கு வழங்கியது.

    ReplyDelete
  2. ஆடலரசு24 January 2022 at 08:54

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்24 January 2022 at 08:55

    மிக அருமை.

    ReplyDelete
  4. சீனிவாசன்24 January 2022 at 12:39

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீகாந்தன்24 January 2022 at 14:54

    அருமை.

    ReplyDelete
  6. செல்லதுரை24 January 2022 at 20:55

    கவிதை மிக அருமை.

    ReplyDelete