எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 21 January 2022

படித்ததில் பிடித்தவை (“பூக்களின் குழந்தை” – ராஜா சந்திரசேகர் கவிதை)


 

*பூக்களின் குழந்தை*

 

மரத்தை அசைக்கிறாள் சிறுமி

பூக்கள் உதிர்கின்றன

கைதட்டி சிரிக்கிறாள்

மறுபடி அசைக்கிறாள்

தொலைவிலிருந்து

கூப்பிடுகிறார் தாத்தா

சிறுமியின் கைகள்

சொன்னதைக் கேட்டு

வடிந்து விட்டன்

அநேகமாய்

எல்லா பூக்களும்

அழைத்துப் போகிறார் தாத்தா

திரும்பிப் பார்த்தபடி செல்லும்

சிறுமியின் தலையில்

ஒட்டிக் கொண்டிருக்கின்றன

சில பூக்களும்

மரத்தின் பிரியமும்..!

(நேத்ராவுக்கு)

 

*ராஜா சந்திரசேகர்*




5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. சீனிவாசன்21 January 2022 at 10:17

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  3. செல்லதுரை21 January 2022 at 10:18

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்21 January 2022 at 10:25

    மரங்கள் என்றுமே
    மனிதர்களை நேசிப்பது தான்!

    ReplyDelete