எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 13 January 2022

படித்ததில் பிடித்தவை (“திறப்பதும்… மூடுவதும்” – அ. ஈஸ்டர் ராஜ் கவிதை)

 


*திறப்பதும்மூடுவதும்*

 

மகள் வயதில் நின்ற

நான்கு பூவரச மரங்கள்

அவளின் திருமணச் செலவிற்காக 

வெட்டப்பட்டபோது

வீடே

ஒருவித நிசப்தத்தில் மூழ்கியது.

 

அன்றுமட்டும்

பூவரசமரங்கள் வெட்டப்படவில்லையென்றால்

அவளது திருமணம் நடந்திருக்காது.

 

இன்று அந்தப் பூவரசமரம்

யாரோ ஒருவர் வீட்டில்

நிலைக்கதவாகவோ

சன்னலாகவோ நிச்சயமிருக்கும்.

 

ஒருபெண்

திறப்பாள்

மூடுவாள்..!

 

*அ. ஈஸ்டர் ராஜ்*


4 comments:

  1. சீனிவாசன்13 January 2022 at 07:55

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  2. வெங்கட்ராமன், ஆம்பூர்13 January 2022 at 09:09

    கவிதை மிக அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. முருகேசன்13 January 2022 at 09:12

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. சத்தியன்13 January 2022 at 13:05

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete