எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 8 January 2022

படித்ததில் பிடித்தவை (“ஏழு வண்ணங்கள்” – விக்ரமாதித்யன் கவிதை)

 


*ஏழு வண்ணங்கள்*

 

நீலத்தை சூடிக்

கொண்டது வானம்.

 

பச்சையை ஏந்திக்

கொண்டது வயல்.

 

கருப்பை வாங்கிக்

கொண்டது கொண்டல்.

 

வெண்மையை

வாங்கிக் கொண்டது

பருத்தி.

 

மஞ்சளை

அப்பிக் கொண்டது சந்தனம்.

 

பழுப்பை அணிந்து

கொண்டது மரம்.

 

சிவப்பை அணிந்து

கொண்டது ரத்தம்.

 

ஏழு வண்ணங்களிலும்

கொஞ்சம் திருடி

எடுத்துக் கொண்டது

வானவில்.

 

ஆனால்

இவனுக்கென்று

இல்லாமற் போயிற்று

தனி ஒரு நிறம்..!

 

 *விக்ரமாதித்யன்*

{கொண்டல்மேகம்}




6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *விக்ரமாதித்யன்*

    விக்ரமாதித்யன்
    (பிறப்பு: செப்டம்பர் 25, 1947)
    ஒரு தமிழ்நாட்டுக் கவிஞர்.
    இவரது இயற்பெயர்
    நம்பிராஜன்.
    திருநெல்வேலி நகரப்
    பகுதியில் கல்லத்தி முடுக்கு
    தெருவில் வளர்ந்தவர்.
    பின்னர் குற்றாலம், தென்காசி,
    சென்னை மேற்கு மாம்பலம்,
    கலைஞர் கருணாநிதி நகர்,
    அசோக் நகர் ஆகிய
    இடங்களிலும் வாழ்ந்துள்ளார்.

    தன் வாழ்நாளில் பல்வேறு
    தொழில்களைப் பார்த்துள்ள
    இவர் முதன் முதலில் கவியரசு
    நா.காமராசன் அவர்கள் நடத்திய
    இலக்கிய பத்திரிகையான
    "சோதனை" என்னும்
    பத்திரிக்கையில் பணிபுரிந்தார்.
    பின்னர் விசிட்டர், அஸ்வினி,
    மயன், இதயம் பேசுகிறது, தாய்,
    தராசு, நக்கீரன் ஆகிய
    பத்திரிகைகளிலும்
    பணிபுரிந்துள்ளார்.
    இவருக்கு திருமணமாகி இரு
    மகன்கள் உள்ளனர்.

    ”ஆகாசம் நீல நிறம்”,
    “ஊரும் காலம்”,
    “உள்வாங்கும் உலகம்"
    உட்பட 16 கவிதைத் தொகுப்புகள்,
    இரண்டு சிறுகதைத் தொகுப்புகள்
    மற்றும் 7 கட்டுரைத் தொகுப்புகள்
    இதுவரை வெளியாகியுள்ளன.
    "நான் கடவுள்" திரைப்படத்தில்
    பிச்சைகாரர் வேடத்தில்
    நடித்துள்ளார்.
    2008ம் ஆண்டின் விளக்கு
    இலக்கிய விருது இவருக்கு
    வழங்கப்பட்டது.


    இவர் எழுதிய புகழ் பெற்ற
    வரிகள்:

    “விரும்பியது
    நதிக்கரை நாகரீகம்
    விதிச்சது
    நகர நாகரீகம்”

    படைப்புகள்:

    கவிதைத் தொகுப்புகள்

    ஆகாசம் நீலநிறம் (1982)
    ஊரும் காலம் (1984)
    உள்வாங்கும் உலகம் (1987)
    எழுத்து சொல் பொருள் (1988)
    திருஉத்தரகோசமங்கை (1991)
    கிரகயுத்தம் (1993)
    ஆதி (1997)
    கல் தூங்கும் நேரம் (2001)
    நூறு எண்ணுவதற்குள் (2001)
    வீடுதிரும்புதல் (2001)
    விக்ரமாதித்யன் கவிதைகள்
    (2001)
    பாதி இருட்டு பாதி வெளிச்சம்
    (2002)
    சுடலைமாடன் வரை (2003)
    தேவதைகள்-பெருந்தேவி-
    மோகினிப்பிசாசு (2004)
    சேகர் சைக்கிள் ஷாப் (2007)
    விக்ரமாதித்யன் கவிதைகள் - II

    சிறுகதைத் தொகுப்பு:

    திரிபு (1993)
    அவன்-அவள் (2003)

    கட்டுரைத் தொகுப்பு:

    கவிமூலம் (1999)
    கவிதைரசனை (2001)
    இருவேறு உலகம் (2001)
    தமிழ்கவிதை- மரபும் நவீனமும்
    (2004)
    தன்மை-முன்னிலை-படர்க்கை
    (2005)
    எனக்கும் என்
    தெய்வத்துக்குமிடையேயான
    வழக்கு (2007)
    எல்லாச் சொல்லும் (2008)
    தற்காலச் சிறந்த கவிதைகள்
    கங்கோத்ரி
    சொல்லிடில் எல்லை இல்லை
    சாயல் எனப்படுவது யாதெனின்
    சும்மா இருக்கவிடாத காற்று
    கவிதையும் கத்தரிக்காயும்
    ஊழ்
    மஹாகவிகள் ரதோற்சவம்.

    விருதுகள் :

    2008 ஆண்டிற்கான விளக்கு
    விருது.
    2014 ஆம் ஆண்டிற்கான சாரல்
    விருது.
    2021 ஆண்டிற்கான விஷ்ணுபுரம்
    விருது.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்8 January 2022 at 09:31

    மிக அருமையான
    உவமைகள்.
    கவிதை மிக அழகு.

    ReplyDelete
  3. செல்லதுரை8 January 2022 at 10:18

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. சீனிவாசன்8 January 2022 at 10:46

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  5. நரசிம்மன் R.K8 January 2022 at 13:11

    அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete