எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 4 March 2021

படித்ததில் பிடித்தவை (“தூய்மை அடைந்துவிட வேண்டும் உன் மனம்” – மகுடேசுவரன் கவிதை)

 


*தூய்மை அடைந்துவிட வேண்டும் உன் மனம்*

 

நீரோடை ஓசையில்லாமல்

வழிந்துகொண்டிருக்கிறது.

அதன் படுகையில்

தம் வண்ண நரம்புகள் யாவும்

தெள்ளத் தெளிவாகப் புலப்படும்படி

கற்கள் கிடக்கின்றன.

 

அந்தக் கல்லுக்கும்

காணும் கண்ணுக்கும்

இடையில் உள்ள நீர்த்தெளிவை

உணர்கிறாய்தானே..?

 

அந்தத் தெளிதூய்மையை

அடைந்துவிட வேண்டும்

உன் மனம்..!

 

*மகுடேசுவரன்*


5 comments:

  1. ஆஹா! அழகிய மொழி, வர்ணனை. சிறந்த கருத்து. நன்றி.

    ReplyDelete
  2. அருமை...அருமை..!

    ReplyDelete
  3. ஸ்ரீராம்4 March 2021 at 11:29

    அந்த நிலையை
    அடைய பெரும்
    ஆசைதான்.
    அதற்கான பக்குவம்
    பெறுவது எந்நாளோ?

    ReplyDelete
  4. கெங்கையா4 March 2021 at 16:05

    கவிதை
    மிக மிக
    அருமை.

    ReplyDelete
  5. அருமை.

    ReplyDelete