எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 10 March 2021

படித்ததில் பிடித்தவை (“நெஞ்சை அடைக்கும் துயரங்கள்” – கவிஞர் இளம்பிறை கவிதை)

 


நெஞ்சை அடைக்கும் துயரங்களை

பூவரச மொட்டுகள் பார்த்து புலம்பினேன்.

பூத்து விசிறிய போது அறிந்து

நெகிழ்ந்தேன்

அதன் ஆறுதல் மொழியை..!

 

ஆண்டனாவில் உட்கார்ந்திருந்த

காகத்திடம் சொன்னேன்

கரைந்து... பறந்தது

பகிர்தலாய்..!

 

பூனையின் பளிங்குகண் பார்த்துக் கூறினேன்

நானிருக்கிறேன்

வால் உரச நெருங்கி

உட்கார்ந்து கொண்டது...

 

விட்டிருக்கலாம் அத்துடன்

உன்னிடம் கூறாமல்..!

 

*கவிஞர் இளம்பிறை*


3 comments:

  1. சத்தியன்10 March 2021 at 06:08

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    அருமை..!

    ReplyDelete
  2. ஸ்ரீராம்10 March 2021 at 11:30

    மனிதர்களை விட
    இயற்கையும்,
    விலங்கினங்களுமே
    மனத்துன்பத்திற்கு
    ஆறுதலை அளிக்கும்
    தன்மையின்.

    ReplyDelete