எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 15 May 2022

படித்ததில் பிடித்தவை (“திடீரென” – இசை கவிதை)


*திடீரென*

 

அந்த ஸ்கூட்டிப் பெண்

திடீரெனக் குனிந்து

முன்னே நின்றிருக்கும்

தன் சின்ன மகனின் கன்னத்தில்

முத்தம் வைக்கிறாள்.

எதற்கு?

என்கிற வினாவை

அதற்குள் அவன் கற்றிருந்தான்.

 

எதுக்கும்மா?

எதுக்கும்மா?

என்று வழிநெடுக

நச்சரித்துக் கொண்டே வருகிறான்

சிறுவன்.

 

சிரித்துச் சிரித்து

மழுப்புகிறாள்

அந்த அன்னை..!

 

*இசை () ஆ.சத்தியமூர்த்தி*




 

6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *இசை*
    இயற்பெயர் சத்தியமூர்த்தி.
    பிறப்பு : 1977.
    பொது சுகாதாரத் துறையில்
    பணி.
    வசிப்பது கோவை மாவட்டம்
    இருகூர்.

    வெளிவந்திருக்கும் நூல்கள் :

    1. காற்று கோதும்
    வண்ணத்துப்பூச்சி (கவிதைகள்)
    2. உறுமீன்களற்ற நதி
    (கவிதைகள்)
    3. சிவாஜிகணேசனின்
    முத்தங்கள் (கவிதைகள்)
    4. அதனினும் இனிது அறிவனர்
    சேர்தல் (கட்டுரைகள்)
    5. அந்தக் காலம் மலையேறிப்
    போனது (கவிதைகள்)
    6. லைட்டா பொறாமைப்படும்
    கலைஞன் (கட்டுரைகள்)
    7. ஆட்டுதி அமுதே (கவிதைகள்)
    8. உய்யடா உய்யடா உய்
    (கட்டுரைகள்)
    9. பழைய யானைக் கடை
    (கட்டுரைகள்)
    10. வாழ்க்கைக்கு வெளியே
    பேசுதல் (கவிதைகள்)
    11. நாயகன் வில்லன் மற்றும்
    குணச்சித்திரன் (கவிதைகள்)
    12. தேனோடு மீன் (கட்டுரைகள்)
    13. மாலை மலரும் நோய்
    (கட்டுரைகள்)
    14. உடைந்து எழும் நறுமணம்
    (கவிதைகள்)

    ReplyDelete
  2. ஸ்ரீராம்15 May 2022 at 08:57

    அன்னையின் அன்பு
    நோக்கம் இல்லாதது;
    பொங்கிவரும்
    காவிரியைப் போல!

    ReplyDelete
  3. கேசவலு15 May 2022 at 08:58

    🙏

    ReplyDelete
  4. செல்லதுரை15 May 2022 at 20:12

    👌

    ReplyDelete
  5. சீனிவாசன்16 May 2022 at 08:57

    😊😊😊

    ReplyDelete