எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 7 May 2022

படித்ததில் பிடித்தவை (“தூரிகை” – செ.புனிதஜோதி கவிதை)

 


*தூரிகை*

 

என்மன உணர்வை

எழுதிய கோலத்திற்குத்தான்

நவீன ஓவியமா?

நான் உடுத்திக்கொள்ளும்

என்குணமா?

என்னில் அடங்கியக் கனவை

கொட்டி அழகு பார்க்கும்

வண்ணக்குளமா?

எனக்குள் உதிர்ந்த வண்ணத்துப்பூச்சியின்

சிறகுகளா?

என்னைபோல் பலவடிவம்

எடுக்கும் அவதாரியா?

விழி வினாக்களுக்கு

விடைதெரியாமல்

ஒரு கேள்விக்குறியாய்

தொடர்கிறது

நானும் நவீன ஓவியமுமாய்..!

 

*செ.புனிதஜோதி*



6 comments:

  1. அருமையான சிந்தனையும் கவிதை வடிவும்.

    ReplyDelete
  2. சூப்பர் தூரிகையும் எண்ணோட்டமும்

    ReplyDelete
  3. அருமை அருமை

    ReplyDelete
  4. சங்கர்7 May 2022 at 09:17

    👏👌

    ReplyDelete
  5. செல்லதுரை7 May 2022 at 09:17

    👍

    ReplyDelete
  6. ஸ்ரீராம்8 May 2022 at 12:18

    ஒவ்வொரு
    தனிமனிதனும்
    புரியாத புதிர் தான்!

    ReplyDelete