எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 13 May 2022

படித்ததில் பிடித்தவை (“தாழ்வாரம்” - கண்டராதித்தன் கவிதை)

 


*தாழ்வாரம்*

 

பணியிலிருந்து எப்போது

வீடு திரும்பினாலும்

நீங்கள் துக்கமாக இருப்பதாக

பிள்ளைகள்

புகார் சொல்கிறார்கள்.

 

எவ்வளவுதான்

பட்டும்படாமலிருந்தும்

நாள்தோறும்

சிறுகசப்பு தட்டிவிடுகிறது.

 

தோற்றத்தில் திண்ணை முற்றம்

வாசல் தோட்டமென

விசாலமாக இருக்கிற மனதிற்கு

தாழ்வாரத்தைப் பணிந்து

வாழத்தெரியவில்லை..!

 

*கண்டராதித்தன்*



5 comments:

  1. வெங்கட்ராமன், ஆம்பூர்13 May 2022 at 20:41

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  2. ஸ்ரீராம்13 May 2022 at 22:10

    எல்லா பணி செய்யும்
    மனிதர்களுக்கும் ஒரு
    காலகட்டத்தில் ஏற்படும்
    மனச்சோர்வை அழகாக
    வடித்திருக்கிறார் கவிஞர்.

    ReplyDelete
  3. செல்லதுரை14 May 2022 at 06:24

    ஆக மிக சிறப்பு....👌👌

    ReplyDelete
  4. சிவபிரகாஷ்14 May 2022 at 07:53

    அருமை.

    ReplyDelete