எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 14 May 2022

படித்ததில் பிடித்தவை (“கருநாவல் பழம்” – தேவதச்சன் கவிதை)

 


*கருநாவல் பழம்*

 

வெளிக்கதவு திறந்து

உள்கதவைத் திறந்து

அறைக்கதவைத் திறந்து

பீரோ திறந்து

ரகசியச் சிற்றறை திறந்து

பெட்டியை எடுத்தேன்

மணம் வீசிக்கொண்டிருக்கிறது

கருநாவல் பழம் ஒன்று

பிசுபிசுவென்று.

கபாடபுரத்தின்

சுடுகாட்டு மரத்தில்

பறிக்கையில்

ஒட்டிய தூசு தும்பட்டையுடன்..!

 

*தேவதச்சன்*



6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    தேவதச்சன்
    (பிறப்பு: 1952) என்ற
    புனைபெயரில் அறியப்படும்
    தமிழ்க் கவிஞரின் இயற்பெயர்
    எஸ்.ஆறுமுகம் ஆகும்.
    இவர் தூத்துக்குடி மாவட்டம்,
    கோவில்பட்டியில் 1952-ல்
    பிறந்தவர் ஆவார்.
    இவர் தமிழில்
    மிகச் சிறந்த
    நவீன கவிஞர் ஆவார்.
    தமிழ் நவீன இலக்கிய
    வரலாற்றில், 1970-களில்
    வந்த கசடதபற, ழ
    இதழ்களில் எழுதத்
    தொடங்கினார்.
    அயல்நாட்டிலிருந்து தரப்படும்
    இலக்கியத்திற்கான “விளக்கு”
    விருது பெற்றவர்.
    தமிழ் நாட்டில் வழங்கப்படும்
    “விஷ்ணுபுரம்” விருது (2015)
    பெற்றவர்.

    ReplyDelete
  2. செல்லதுரை14 May 2022 at 06:25

    👌

    ReplyDelete
  3. சிவபிரகாஷ்14 May 2022 at 07:54

    பெட்டியில் இல்லையெனினும்
    பழைய ஞாபகங்கள் வருடத்தான்
    செய்கிறது.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்14 May 2022 at 07:55

    அழகான வர்ணனை.

    ReplyDelete
  5. கருநாவலும் அருமை. கவிதையும் அருமை.

    ReplyDelete
  6. கேசவலு14 May 2022 at 16:45

    🙏

    ReplyDelete