எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 12 May 2022

படித்ததில் பிடித்தவை (“பொறாமையிடம் கொஞ்சம் இரக்கமாயிருங்கள்..!” – இசை கவிதை)

 

*பொறாமையிடம் கொஞ்சம் இரக்கமாயிருங்கள்..!*

 

பொறாமையை ஆழ்ந்து நோக்கினால் அது அன்பாக

மாறிவிடும் என்று சொன்னார்கள்.

 

நான் நோக்கத் துவங்கினேன்

அவ்வளவு ஆழமாக

அவ்வளவு திடமாக.

 

அது

ஆடவில்லை

அசையவில்லை.

 

நானும் விடவில்லை

நோக்கிக் கொண்டே இருந்தேன்.

 

திடீரென்று

அதன் கண்களிலிருந்து தாரைகள் வழிந்து வழிந்து வந்தன.

 

நிற்காமல் அழுதாலும்

அது அன்பாக மாறியது போல் தெரியவில்லை.

 

அழுகிற பொறாமைக்கு

என்ன பெயர் வைப்பதென்று

எனக்கும் தெரியவில்லை..!

 

*இசை () ஆ.சத்தியமூர்த்தி*



6 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *இசை*
    இயற்பெயர் சத்தியமூர்த்தி.
    பிறப்பு : 1977.
    பொது சுகாதாரத் துறையில்
    பணி.
    வசிப்பது கோவை மாவட்டம்
    இருகூர்.

    வெளிவந்திருக்கும் நூல்கள் :

    1. காற்று கோதும்
    வண்ணத்துப்பூச்சி (கவிதைகள்)
    2. உறுமீன்களற்ற நதி
    (கவிதைகள்)
    3. சிவாஜிகணேசனின்
    முத்தங்கள் (கவிதைகள்)
    4. அதனினும் இனிது அறிவனர்
    சேர்தல் (கட்டுரைகள்)
    5. அந்தக் காலம் மலையேறிப்
    போனது (கவிதைகள்)
    6. லைட்டா பொறாமைப்படும்
    கலைஞன் (கட்டுரைகள்)
    7. ஆட்டுதி அமுதே (கவிதைகள்)
    8. உய்யடா உய்யடா உய்
    (கட்டுரைகள்)
    9. பழைய யானைக் கடை
    (கட்டுரைகள்)
    10. வாழ்க்கைக்கு வெளியே
    பேசுதல் (கவிதைகள்)
    11. நாயகன் வில்லன் மற்றும்
    குணச்சித்திரன் (கவிதைகள்)
    12. தேனோடு மீன் (கட்டுரைகள்)
    13. மாலை மலரும் நோய்
    (கட்டுரைகள்)
    14. உடைந்து எழும் நறுமணம்
    (கவிதைகள்)

    ReplyDelete
  2. பேரன்பு

    ReplyDelete
  3. வெங்கட்ராமன், ஆம்பூர்12 May 2022 at 08:18

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  4. செல்லதுரை12 May 2022 at 08:18

    👍

    ReplyDelete
  5. கெங்கையா12 May 2022 at 18:28

    கவிதை மிக அருமை.

    ReplyDelete