எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 6 May 2022

படித்ததில் பிடித்தவை (“ஒருவரும் வரவேயில்லை” – வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் கவிதை)

 


*ஒருவரும் வரவேயில்லை*

 

நகைக்கடைக்காரர் தான்

நினைவுபடுத்துகிறார்

அட்சய திருதியையை...

 

ஜவுளிக்கடைக்காரர் தான்

நினைவுபடுத்துகிறார்

தீபாவளி வரப்போவதை...

 

அக்னி நட்சத்திரம்

நாளை தொடங்குவதைக்கூட

ஏசி கடைக்காரரே

நினைவுபடுத்துகிறார்...

 

பெட்ரோல் விலை ஏறியதை

மின்சார வாகன விற்பனையாளர்

நினைவுபடுத்துகிறார்...

 

என் வீட்டுக் கழிவறையில்

கிருமிகள் சூழ்ந்திருப்பதைக்கூட

டாய்லெட் கிளீனர் தயாரிப்பாளர்

நினைவுபடுத்துகிறார்...

 

நீண்ட நேரமாக தேடிக்கொண்டிருக்கும்

டூ வீலர் சாவியை

எங்கு வைத்தேனென

நினைவுபடுத்தத்தான்

ஒருவரும் வரவேயில்லை..!

 

*வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்*

6 comments:

  1. சங்கர்6 May 2022 at 08:58

    😄

    ReplyDelete
  2. ஸ்ரீராம்6 May 2022 at 08:59

    மிக அருமை.
    ஆதாயம் இல்லாமல்
    எவரும், எதையும்
    ஞாபகப்படுத்துவதில்லை.

    ReplyDelete
  3. செல்லதுரை6 May 2022 at 09:00

    👌👌

    ReplyDelete
  4. சத்தியன்6 May 2022 at 13:46

    👍🏻🙏👏👏👌🏻👌🏻

    ReplyDelete
  5. சீனிவாசன்6 May 2022 at 13:47

    👌👌👌😊

    ReplyDelete
  6. அம்மையப்பன்6 May 2022 at 13:48

    🙂

    ReplyDelete