எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 27 May 2021

படித்ததில் பிடித்தவை (“இயலாமை” – கீர்த்தி கவிதை)

 


*இயலாமை*

 

அவன் செதுக்கிவைத்த

எல்லா சிலைகளும்

அடிக்கடி வந்து

மண்டியிட்டு நன்றி தெரிவிக்கின்றன

சிற்பியின் முன்.

கோடி முறை வந்தனம்

என்கின்றன.

பாறைகளின் உள்ளிருந்த தங்களை

உயிர்ப்பித்தது குறித்து

தாயென்றும் தந்தையென்றும்

தன்னை அழைக்கும்

சிற்பங்களின் முன்

அவனும் கர்வப்பட்டுக்கொள்கிறான்

கற்களின் கல்பத்தில்

தானே பிரம்மன் என்று.

 

மூலையில்

முடங்கிக்கிடக்கின்ற

கையொடிந்த சிற்பம் ஒன்று

எப்போதாவது

வேண்டுகோளிடுகிறது

தன்னை மீண்டும் பழைய வடிவில்

பாறையாக்கிவிடும்படி.

யாரும் அறியாதபடி

மண்டியிடுகிறான் சிற்பி..!

 

*கீர்த்தி*


9 comments:

  1. கவிதை அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்27 May 2021 at 07:51

    மிக அருமை.

    ReplyDelete
  3. நந்தகுமார்27 May 2021 at 07:52

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. சத்தியன்27 May 2021 at 09:13

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  5. கவிதை அருமை.

    ReplyDelete
  6. கெங்கையா27 May 2021 at 10:18

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  7. கவிதை அருமை.

    ReplyDelete