எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 23 May 2021

படித்ததில் பிடித்தவை (“மாலையில் யாரோ...” – மு.மகுடீசுவரன் கவிதை)


 *மாலையில் யாரோ...*

 

சுமதி அக்காவுக்கு

மாலையில் யாரோ மனதோடு பேச

பாடல் ரொம்பப் பிடிக்கும்.

எப்போதும்

முணுமுணுத்துக்கொண்டே இருப்பாள்.

அவள் கல்யாணக் கேசட்டில்கூட

சின்னு மாமாவிடம் சொல்லி

முகூர்த்தப் பின்னணியில்

இந்தப் பாடலைத்தான் பதியச் சொன்னாள்.

இது யாரு பாட்டுக்கா என்றால்

பானுப்ப்ரியா பாட்டு என்பாள்.

 

சுமதி அக்காவை பின்னாளில்

சந்தித்தப்போது

பேச்சுவாக்கில்

இதே பாடலை நினைவுகூர்ந்து

இது யாரு பாட்டுன்னு

நினைவிருக்கா என்றேன்.

இளையராசா பாட்டு என்றாள்.

 

சமீபத்திய சந்திப்பில்

விளையாட்டாய்

இதே பாடலை பாடச் சொல்லிக் கேட்டேன்.

சிரித்தபடியே பாடியவள்

இது ஸ்வர்ணலதா பாட்டு தெரியுமா என்றாள்.

தெரியாது என்றேன்.

 

மாலையில் யாரோ... எப்போதும்

எனக்கு சுமதி அக்கா பாட்டுதான்..!

 

*மு.மகுடீசுவரன்*



5 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *மு.மகுடீசுவரன்*

    ஆண் கவிஞர்.
    பிறந்த நாள் : 27.11.1981.
    சொந்த ஊர் : ஒட்டன்சத்திரம்.
    தற்போது வசிப்பது :
    உடுமலைப்பேட்டை.
    பள்ளிப் படிப்பு :
    விவேகானந்தா வித்யாலயா,
    பழனி (1997).
    கல்லூரி : விவேகானந்தா
    கல்லூரி, சோளவந்தான்,
    மதுரை (2002).
    வேலை : ஆசிரியராக
    பள்ளபாளையம், PUM
    பள்ளியில் பணிபுரிகிறார்.

    ReplyDelete
  2. கவிதை அருமை.

    ReplyDelete
  3. கவிதை அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீராம்23 May 2021 at 09:16

    நாட்டமுள்ள
    ஒரு விஷயத்தை
    விருப்போடு தொடர்ந்தால்
    அது குறித்த
    அறிவு மேம்படும்
    என்பதனை சூட்சமமாக
    வெளிப்படுத்தும் கவிதை.

    ReplyDelete
  5. Beating heart.

    ReplyDelete