எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 24 May 2021

படித்ததில் பிடித்தவை (“அம்மன் வீதி உலா” – காசாவயல் கண்ணன் கவிதை)

 


*அம்மன் வீதி உலா*

 

வீதிப்பெண்களுக்கு

அம்மன் வீதி உலாவென்றால்

அலாதிப் ப்ரியம்.

மனசின் ஆசையெல்லாம்

குழைத்து மாக்கோலம் தீட்டுவார்கள்.

இன்று எந்த வாகனத்திலென்று

தவிப்போடு

தெருமுக்குவரை தேடுவார்கள்.

அருகே வந்ததும்

உருகித்தான் போவார்கள்.

சிங்க வாகனத்தில் அம்மன்கூட

மங்கலாய்த்தான் தெரிவாள்

பிரியமானவர்களின்

பவனி கடக்கும்வரை..!

 

*காசாவயல் கண்ணன்*



7 comments:

  1. சத்தியன்2 June 2021 at 09:15

    கவிதை அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  2. சீனிவாசன்2 June 2021 at 09:17

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. கெங்கையா2 June 2021 at 10:02

    அம்மன் வீதி உலா
    கடந்த கால நினைவுகள்.
    காசாவயல் கண்ணன்
    கவிதை அருமை.
    கவிஞருக்கு
    பாராட்டுக்கள் பல.

    ReplyDelete
  4. செல்லதுரை2 June 2021 at 10:45

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்2 June 2021 at 11:46

    திருவிழாக்களும்,
    கொண்டாட்டங்களும்
    நமது அன்பை
    நெஞ்சைக் கவர்ந்தவர்களுக்கு
    வெளிப்படுத்த
    இனிய வாய்ப்பு..!

    ReplyDelete
  6. லதா இளங்கோ2 June 2021 at 19:27

    Giving excitement
    and admiration.

    ReplyDelete