எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 31 October 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


அன்பின் விலைகள்
“எதற்காகவோ கண் கலங்கியபடி
ஆட்டோவில் ஏறினேன்.
சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன்
திரும்பிப் பார்த்துத் தயங்கி
அழாதிங்க என்றான்.
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு
எட்டு ரூபாய் சில்லறை
எண்ணிக் கொடுத்துவிட்டுச்
சென்று விட்டான்.

அந்த மீதி சில்லறையாவது
வாங்காமல் விட்டிருக்கலாம்..!”

                             -  அனிதா ஜெயக்குமார்.

No comments:

Post a Comment