எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 30 October 2014

படித்ததில் பிடித்தவை (கவிதை)


ஆறாத சொல்..!
“உனக்கென்ன
ஒரு சொல்
வீசிவிட்டுப் போகிறாய்...

இதயச் சுவர்கள் அறுபட்டு
வேர்கள் தளர்ந்து
உற்சாகக் கிளைகள் ஒடிந்து
சுவாசத்தின் தடம் புரண்டு
வெற்றுடல் சுமந்து
கண்ணீர் தவிர்க்கவே
மௌனம் காக்கிறேன் நான்!

நீயே மாலையில்
மென் விரல்கள் பற்றி
புது சிநேகம் வளர்த்து
மன்னிக்கவும் வேண்டுகிறாய்...

கடந்து போகிறது 
நம் வாழ்க்கை
சொற்களைச் சுமந்த வடுக்களுடன்
என் மனமும்...

மன்னிப்பைச் சுமந்த வடுக்களுடன் 
உன் தோள்களும்..!”

                                                          -  பிரேமபிரபா.

No comments:

Post a Comment