எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 10 February 2022

படித்ததில் பிடித்தவை (“கடைசி பென்ஞ்சில் உட்கார்ந்தவன்” – மு. மகுடீசுவரன் கவிதை)

 


*கடைசி பென்ஞ்சில் உட்கார்ந்தவன்*

 

கொஞ்சம் உயரமானவன்

மூச்சு விடாமல் பேசுவான்

சந்தேகம் எழுப்புவான்

கேள்வி கேட்பான்

பதில் சொல்லமாட்டான்

பெண்பிள்ளைகள் சீண்டுவான்

கவிதை எழுதுவான்

திரைப்பாட்டு படிப்பான்

சட்டையில் மை தெளிப்பான்

சண்டையில் சட்டை கிழிப்பான்

கரும்பலகையில் பேசியவர் பட்டியலில்

முதல் பெயர் பிடிப்பான்

தேர்வறையில் தூங்குவான்

தேர்ந்த கதை சொல்வான்

திணறி திணறி வாசிப்பான்

தெரியாத ஆங்கிலம் முயற்சிப்பான்

இப்படி அவனைப் பற்றிய

உங்கள் அனுமானங்களை

பின்பு ஒருநாள்

உங்கள் ஓய்வு காலத்தில்

கடைத்தெருவில் கண்டால்

ஒளிந்தோடுவோர் மத்தியில்

கைகுலுக்கி கைக்கூடை வாங்கி

வீடு வரை வந்து பொய்யாக்குவான்

அவனைத்தான் நீங்கள்

வகுப்பில் கடைசி பென்ஞ்சில்

உட்கார வைத்திருந்தீர்..!

 

*மு. மகுடீசுவரன்*



7 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *மு.மகுடீசுவரன்*

    ஆண் கவிஞர்.
    பிறந்த நாள் : 27.11.1981.
    சொந்த ஊர் : ஒட்டன்சத்திரம்.
    தற்போது வசிப்பது :
    உடுமலைப்பேட்டை.
    பள்ளிப் படிப்பு :
    விவேகானந்தா வித்யாலயா,
    பழனி (1997).
    கல்லூரி : விவேகானந்தா
    கல்லூரி, சோளவந்தான்,
    மதுரை (2002).
    வேலை : ஆசிரியராக
    பள்ளபாளையம், PUM
    பள்ளியில் பணிபுரிகிறார்.

    ReplyDelete
  2. லதா இளங்கோ10 February 2022 at 12:05

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்10 February 2022 at 17:08

    மிக அருமை.
    என்னுடைய பள்ளி
    கடைசி பென்ஞ்
    நண்பர்கள் சிலர்
    கவிஞர் கூறியது போல
    இன்றளவும் நட்பை மேன்மையாக
    பேணிக்கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. கெங்கையா10 February 2022 at 17:09

    கவிதை மிக அருமை.
    அந்த கால நினைவுகள்
    மிக அருமை.

    ReplyDelete
  5. சத்தியன்10 February 2022 at 17:10

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  6. ஸ்ரீகாந்தன்10 February 2022 at 17:11

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. ஜெயராமன்11 February 2022 at 09:17

    நன்று.

    ReplyDelete