எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 21 October 2021

படித்ததில் பிடித்தவை (“மரணப்படுக்கையில் கவிதைகள்” – நிலாப்பெண் புவனா கவிதை)


*மரணப்படுக்கையில்  கவிதைகள்*

 

நீ உயிருக்குள்

ஊடுருவியதால்,

உயிர் பெற்ற எழுத்துக்கள்

பிணைந்து நின்று,

கவிதைகளாக

வெறியாட்டம் போட்டன…

 

நீ பார்க்கும் வேளைகளில்,

பல்லிளித்து நின்றன…

 

நீ பேசிய ஒருசில

வார்த்தைகளை கேட்டு,

கோடி வார்த்தைகள்

முட்டிக் கொண்டன,

உன்பற்றிய கவிதைகளுக்குள்

எப்படியேனும் நுழைந்துவிட…

 

அழகான கவிதைகளென,

புன்னகைப் பூத்தாய்…

ஆரவாரமிட்டு கூச்சலிட்டன

உன்னால் பிறந்த,

கவிக் குழந்தைகள்…

 

மெள்ள நீ விலகிசெல்கையில்

வீரிட்டு அழுதன கைக்குழந்தையாய்

 

முற்றிலுமாக விட்டுச்சென்றாய்,

மரணப்படுக்கையில்

மெளனித்தன கவிதைகள்..!

 

*நிலாப்பெண் புவனா*


No comments:

Post a Comment