எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 31 July 2015

படித்ததில் பிடித்தவை (காஞ்சனா ராம் கவிதைகள்)


கோவில் உண்டியல்
“எல்லாக் கோவில்களிலும்,
உண்டியல் இருக்கு...

ஆனா அதுக்கான சாவி,
எந்தக் கடவுளிடமும்
இருப்பதாக தெரியவில்லை..!”



பயணம்...
“காலையில்
அய்யராத்து ஹோமத்தில்
கலந்துட்டு,

மதியம்
பஷீர் பாயின் பிரியாணி
விருந்தை முடிச்சிட்டு,

இரவு பீட்டர் தாத்தா
சாவில்
துக்கம் அனுசரித்தது...

சாமியானா பந்தல்..!”

                                - காஞ்சனா ராம்.

No comments:

Post a Comment