எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 14 July 2015

படித்ததில் பிடித்தவை (கவிஞர் மகுடேசுவரன் கவிதை)


ஓய்வு
“ஓய்வு என்பது
மரத்தடியில் அசைப்போடும்
மாட்டுக்கு வாய்ப்பது போல்
வாய்க்கவேண்டும்.

உட்கார்ந்த பிறகும்
உண்ணிகளைக் கடித்துன்ன
வெடுக்கென்று தலைதிருப்பும்
நாய்க்கு வாய்ப்பதைப்போல் அல்லவா
வாய்க்கிறது நமக்கு..!"

           - கவிஞர் மகுடேசுவரன்.

No comments:

Post a Comment