எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 8 July 2015

படித்ததில் பிடித்தவை (கவிதைகள்)


தேடாதே...
வீட்டிற்குள்
தன்னை பரபரப்பாக
தேடிக் கொண்டிருப்பவனை
ஒளிந்திருந்து
பார்த்து ரசிக்கிறது
பைக் சாவி..!”

- வெங்கடேஷ் ஆறுமுகம்.


சிறகுகள்
“ஏழு கடல்
ஏழு மைல் தாண்டி
மந்திரவாதியின்
உயிரைத் தேடிப் போனவன்
எப்படிப் போனான்
என்று கேட்கவே இல்லை
எந்தக் குழந்தையும்
அவர்கள் வசம் சிறகுகள்
இருந்தன..!”
                                        -  இரா.பூபாலன்.

No comments:

Post a Comment