எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 7 February 2021

*ஆயுள்*

ஏழைக் குடும்பத்தின்

வீட்டு தலைவர்

திடீரென உடல்நலம்

பாதித்தப் பின்

முதலில் பெருங்கவலை

அடைந்து மருத்துவம்

பார்த்த குடும்பத்தினர்...

 

பெருஞ்செலவுக்கு அஞ்சி

அவரின் பிரிவை

எதிர்நோக்கி

நாளுக்கு நாள்

தேற்றிக் கொள்கின்றனர்

அவருக்கு ஆயுள்

அவ்வளவுதான் என்று..!”

 

*கி.அற்புதராஜு*


6 comments:

  1. வெங்கடபதி7 February 2021 at 08:13

    கவிதை அருமை.

    ReplyDelete
  2. Pensive and sorrowful..!

    ReplyDelete
  3. சத்தியன்7 February 2021 at 08:24

    நிதர்சனம்.

    ReplyDelete
  4. மருத்துவம் மற்றும் கல்வியை நமது அரசாங்கம் நாட்டு மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தால் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க முடியும்.

    மாறாக டாஸ்மாக்கில் வருமானம் ஈட்டும் அரசால் வேறு என்ன செய்து விட முடியும்?

    ஏழை மக்களின் உயிரை எடுக்கத்தான் முடியும் என்பது வருந்ததக்க உண்மை..!

    ReplyDelete
  5. Uncontrollable feelings..!

    ReplyDelete
  6. ஸ்ரீராம்7 February 2021 at 17:18

    இல்லாமையினால் ஏற்படும் இயலாமை மிக மிக துன்பமானது, துயரமானது.

    ReplyDelete