எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 20 June 2020

படித்ததில் பிடித்தவை (“பூனை” – மகுடேசுவரன் கவிதை)


*பூனை*

வீதியில் சென்ற சிறுமி
சாலையைக் கடக்க முயன்ற
பூனையைப் பார்த்து நின்றாள்.
பூனையும் நின்றது
அவளைப் பார்த்து..!

யார் முதலில்
குறுக்கிட்டுக் கடப்பது என்ற
யோசனையில்
இருவரும் தயங்கி நின்றனர்.

பிறர்பொருட்டு
நாம் காட்டவேண்டிய
இத்தகைய சிறு அக்கறைகளைத்தாம்
நாம் என்றோ இழந்துவிட்டோம்..!

    *மகுடேசுவரன்*

No comments:

Post a Comment