எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 11 June 2020

படித்ததில் பிடித்தவை (“அஸ்தியாவின் உலகம்” – க.அம்சப்ரியா கவிதை)


*அஸ்தியாவின் உலகம்*

ஒரே ஒரு களிமண் உருண்டைதான்
வழங்கப்பட்டது பெருங்கருணையுடன்.

முதலில் அம்மா செய்தாள்
அது கொஞ்சம் பாலூட்டியது.

மறுபிசைவில் அப்பா செய்தார்
தலைகோதி முத்தமிட்டது.

இரண்டு பாகமாக உடைத்து
பிறகு திருப்தியுறாமல்
சிறுசிறு உருண்டைகளாக்கி
சிறு சிறு அண்ணன்களை உருவாக்கினாள்
அவர்கள் தோள்களில் அமர்த்தி
விளையாட்டுக் காட்டினார்கள்.

மீதமிருந்த சிறு உருண்டைகளை
தங்கைகளாக்கினாள்
ஓடிப்பிடித்து விளையாடியதோடு
சண்டையும் போட்டார்கள்.

இரவுக்கு என்ன அவசரமோ
தன்னைப் பகலாக்கத் துவங்க
களிமண் பிடுங்கப்பட
திடுக்கிட்டு விழித்த சிறுமி அதிஸ்யா
அன்றைய சமையல் வேலைக்குத் தயாராகிறாள்.

           *க.அம்சப்ரியா*

No comments:

Post a Comment