எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 2 June 2020

படித்ததில் பிடித்தவை (“நிரப்புதல்” – கா.சிவா கவிதை)


 *நிரப்புதல்*

வசித்த பறவைகள்
வேறிடம் தேடிக்கொண்டன.

மண்ணால் மூடப்பட்ட இடத்தில்
சிறு செடிகள் முளைத்தன.

நிழலில் அணைத்தபடி
ஒய்வெடுக்கும் பூனைகள்
அங்கு நிறுத்தப்படும்
வாகனங்களின்மேல்
துயில்கின்றன.

அண்டை வீட்டின் வண்ணம்
அடையாளமாக கூறப்படுகிறது.

புதிதாக திறந்த கடையில்
பழங்களும் கிடைக்கின்றன.

அம்மரத்தை அகழ்ந்ததால்
தோன்றிய என் அகஅகழியை
நிரப்புமென நிறுவியுள்ளேன்
சிறு போன்சாய் தொட்டியை..!”

       *கா.சிவா*

No comments:

Post a Comment