எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 3 March 2015

படித்ததில் பிடித்தவை (கவிதைகள்)


வேரடி நீரோட்டம்
“மாநகரப் பேருந்தில்
விளக்குகள் போடும்போது
கன்னத்தில் ஒற்றிக்கொள்பவரின்
கால்கள்
இன்னமும்
கிராமத்திலேயே இருக்கின்றன..!”
                            -   மணி ஜெயப்பிரகாஷ்வேல்.


பார்வை
“பண்டிகை நாளன்று
அம்மனுக்கு புடவை சாத்தி
தரிசிக்கும் கண்கள்
அதே இரவில் காத்திருக்கின்றன
நடன மங்கையரின்
ஆடை விலகலுக்காய்..!”
                                -   ந. சிவநேசன்.

(நன்றி: ஆனந்தவிகடன்)

No comments:

Post a Comment