எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 2 July 2022

படித்ததில் பிடித்தவை (“நட்பும் வரிகளும்” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*நட்பும் வரிகளும்*

 

அவசரமாய்ப் போகிறேன்

அப்புறம் பேசுவோம்

என்றார் ஒரு நண்பர்

இம்முறையும்.

 

பிறகு பார்க்கலாம் என

அலைபேசியை அணைத்தாள்

ஒரு தோழி.

 

கடிதப் போக்குவரத்தை

நிறுத்திவிட்ட நண்பர்

ஈமெயிலில் தென்படுவதும்

குறைந்து போயிற்று.

 

கோயிலில் பழக்கமான புது நண்பர்

பக்தி பரவசத்தில்

சில வார்த்தைகளோடு

சென்று விடுகிறார்.

 

தொலைகாட்சியில் செய்தி வாசிக்கும்

நண்பனின் புன்னகையை

செய்தி முடியும் நேரத்தில்

அரிதாகப் பார்க்க முடிகிறது.

 

குவிந்து கிடக்கின்றன மனதில்

நட்பும் வரிகளும்.

 

தனிமையோடு நடக்கிறது

கபடி விளையாட்டு.

 

யார் மீதும்

வருத்தம் வைக்க

விரும்பவில்லை.

 

எப்போதும் போல்

நிதானமாய்ப் பார்த்து

தலை அசைத்து

நலம் விசாரிக்கிறது

பால்கனி செடி.

 

இப்போது அதில்

புதிதாய்

ஒற்றைப்பூ..!

 


*
ராஜா சந்திரசேகர்*



10 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *கவிஞர் ராஜா சந்திரசேகர்*

    பிடித்த வாசகம்:
    "என்னவும் செய்.
    செய்வதில் நீ இரு."

    ராஜா சந்திரசேகர் எழுதிய
    கவிதைத்தொகுப்புகள்:

    1. கைக்குள் பிரபஞ்சம்
    2. என்னோடு நான்
    (2003ஆம் ஆண்டுக்கான
    கவிப்பேரரசு வைரமுத்துவின்
    கவிஞர்கள் திருநாள் விருது
    பெற்றது)
    3. ஒற்றைக்கனவும்
    அதைவிடாத நானும்
    (2002ஆம் ஆண்டுக்கான
    திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
    பெற்றது)
    4. அனுபவ சித்தனின்
    குறிப்புகள்
    5. நினைவுகளின் நகரம்
    6. மீனுக்கு நீரெல்லாம்
    பாதைகள்
    7. மைக்ரோ பதிவுகள்

    ReplyDelete
  2. வெங்கட்ராமன், ஆம்பூர்2 July 2022 at 08:59

    👏👏💐💐🙏🏻🙏🏻

    ReplyDelete
  3. சத்தியன்2 July 2022 at 09:01

    அருமையான கவிதை.
    நடப்புலகம் நிதர்சனம்.

    ReplyDelete
  4. கெங்கையா2 July 2022 at 09:02

    கவிதை மிக அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நரசிம்மன் R.K2 July 2022 at 09:03

    அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. Classic....👌

    ReplyDelete
  7. சீனிவாசன்2 July 2022 at 09:05

    👌👌👌

    ReplyDelete
  8. அருமை. நேரமின்மை அவசர உலகம்

    ReplyDelete
  9. ஸ்ரீராம்5 July 2022 at 06:24

    வாழ்வின் ஒரு கட்டத்தில்
    நகமும், சதையுமாக
    மனிதர்களின் நட்பை விட
    சூழ்ந்திருக்கும் இயற்கையே
    சாசுவதமான எதிர்பார்ப்பில்லாத
    நட்பு.

    ReplyDelete