எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 21 October 2015

படித்ததில் பிடித்தவை (சாயல் – கல்யாண்ஜி கவிதை)


சாயல்
“இந்த வருடமும்
சரஸ்வதி பூஜைக்கு
அம்மன் முகம் செய்தேன்.

முன்பு
தங்கச்சி சாயலில்
முகம் இருக்கும்.

இடையில்
இவள் சாயலில்
இருக்கிறது என்பார்கள்.

இந்த முறை
உறவின் அடையாளங்களிலிருந்து
கழன்ற ஒரு முகத்துடன்
சரஸ்வதி உருவம்
சிரித்தது.

அ – சாயலை அடைவதற்கு
ஆகிவிட்டது
இத்தனை காலம்..!” 

                                          -  கல்யாண்ஜி.

No comments:

Post a Comment