எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 17 May 2015

கிராமத்திலிருந்து வந்த வெள்ளைப் பூசணிக்காய்...


“கோடை விடுமுறையில்
ஒரு வாரம் குடும்பத்துடன்
கிராமத்துக்கு சென்று
நகரத்துக்கு திரும்பும் போது
காரிலேயே தேங்காய்,
மாங்காய், புளி, கருவாடு,
உளுந்து, பச்சைப்பயிரோடு
ஒரு வெள்ளை பூசணியும்
வீட்டுக்கு வந்து சேர்ந்தது...

ஒரு வாரத்தின் முகநூல்
செய்திகளை பார்த்தப்போது
வெள்ளை பூசணியின்
மருத்துவப்பயன் பற்றிய
செய்தியைப் படித்து, பிடித்து,
நண்பர்களுக்கு பகிர்ந்து,
வீட்டில் மனைவிக்கு
காண்பித்தும்...

சமையல் செய்யாமல்
அந்த வாரத்தில் வந்த
அமாவாசை அன்று
எங்கள் எல்லோரையும்
நடு ஹாலில் நிற்க வைத்து
திருஷ்டி சுற்றி தெருவில்
உடைக்கப்பட்டது அந்த
வெள்ளைப் பூசணிக்காய்..!”

         -     K. அற்புதராஜு.

No comments:

Post a Comment