எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 19 January 2015

நகரத்து விவசாயி...


“குறுவை, சம்பா, தாளடி என
மூன்று போகம் நெல் சாகுபடி.
ஊடு பயிராக உளுந்து, பயிறு.
தோட்டத்தில் வெண்டை, கத்தரி,
கீரை, அவரை, கொத்தரை,
புடலங்காய், பீர்க்கங்காய்,
பரங்கி, பூசணி, வெள்ளரி என
விதவிதமாய் கிராமத்தில்
விளைவித்த அப்பா...

வயதானதும் நகரத்தில்
மகன் கட்டிய வீட்டின்
மொட்டை மாடியில்
வெண்டைச்செடியை
தொட்டியில் வளர்த்து
அதில் வரும்
வெண்டைக்காயை
பறிக்கும்போது
பாரமாகிதான் போகிறது 
மனசு..!”

                      -  K. அற்புதராஜு.

No comments:

Post a Comment