எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 19 December 2014

நகரத்து மரமும்...செடியும்...


“கிராமத்து மரத்தில்               
பழத்தை சுவைத்த பறவை
பறந்து சென்றது
நகரத்தை நோக்கி...

பறவை வெளியேற்றிய
விதைகளை சுமக்க
நகரத்தில் மண்
கிடைக்கவில்லை.
                                                                                                             
விதைகளை வாங்கிக்கொண்டது
நகரத்து கட்டிடம் ஒன்று.
கட்டிடத்தின் பக்கவாட்டில்
விழுந்த விதை
ஏ.சி.யில் வெளியேறும்
தண்ணீரை பெற்று
விரைவாக வளர்ந்தது...

கட்டத்திற்கு பக்கத்தில்
உயர்ந்து வளர்ந்த அந்த 
ஒற்றை ஆலமரத்தை விட
உயரத்தில் வளர்ந்தது
அந்த செடி.

மெட்ரோ ரயில் பணிக்காக
அந்த பெரிய ஆலமரத்தை
வெட்டி சாய்த்ததையும்
கட்டிடத்தில் வளரும் அந்த 
செடி பார்த்துக்கொண்டிருந்தது..!”

                                            -  K. அற்புதராஜு.

No comments:

Post a Comment