எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 16 December 2014

படித்ததில் பிடித்தவை (முகுந்த் நாகராஜன் கவிதை)


“சுரங்கப்பாதை
பொம்மை வியாபாரி
இரண்டு வாத்துகளுக்கு
சாவி கொடுத்து
தயாராக வைத்திருந்தான்.

ரயில் விட்டு
கூட்டம் இறங்கி வர
ஆரம்பித்ததும்
ஒன்றின் பின் ஒன்றாக
வாத்துகளை விடுவித்தான்.

முதல் வாத்து
ஓடிப்போய்
ஒரு சிறுமியின்
காலை முட்டியது.

பிரியப்பட்டு
அவள் அதை
வாங்கிக்கொண்டாள்.

பின்னால்
போன வாத்து
சாவி தளர்ந்து
தனியாகத்
திரும்பி வந்தது.

சிறுமி வாங்கிப்போன
வாத்து
அவள் வீடு
பழகும் வரை
சுரங்கப்பாதை
இருந்த திசை
நோக்கியே
ஓடிக்கொண்டிருந்தது..!”

               -   முகுந்த் நாகராஜன்.

No comments:

Post a Comment