எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 22 December 2014

படித்ததில் பிடித்தவை (லிங்குசாமி கவிதைகள்)


இயக்குனர் லிங்குசாமி எழுதிய “லிங்கூ – கவிதையும் ஓவியமும்” புத்தகத்திலிருந்து சில கவிதைகள்...


“இஸ்திரி போடும் தொழிலாளியின்
வயிற்றில் சுருக்கம்..!”
*** *** *** *** ***
“பூச்சி மருந்தில் பூச்சி
உயிரோடு...”
*** *** *** *** ***
“அசோகர் இத்தனை மரங்களை நட்டார்
அதில் ஒன்று கூட போதி மரமில்லையா..!”
*** *** *** *** ***
“வயிறு முட்ட சாப்பிட்டிருக்க வேண்டும்
ஆப்பிள் விழுந்த கணத்தில்
நியூட்டன்..!”

 *** *** *** *** ***
“சுஜாதா
கவிதா பத்மா உஷா
அப்புறம் கீதா
இவை எல்லாம்
வெறும் பெயர்கள் அல்ல...”

        - இயக்குனர் லிங்குசாமி.

No comments:

Post a Comment