எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 27 November 2020

படித்ததில் பிடித்தவை (“அற்புதம்” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)

 


*அற்புதம்* 

 

பாத்தி கட்டி

உரமிட்டு

நீர் பாய்ச்சி

நீ வளர்த்திருக்கும்

ரோஜாக்கூட்டத்திலிருந்து

சற்றே விலகி

உன் மண்வெட்டியிலிருந்து தப்பி

வேலியில் ஒளிந்திருந்து

எட்டிப் பார்க்கிறது

ஒரு காட்டுச் செடியின்

அற்புத மலர்..!

 

 *சேயோன் யாழ்வேந்தன்*


1 comment:

  1. ஸ்ரீராம்29 November 2020 at 08:13

    ஒரு சுயம்பூ.

    ReplyDelete