எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 19 November 2020

படித்ததில் பிடித்தவை (“நிஜம் கசியாத கவிதை” – கல்யாண்ஜி கவிதை)

 



*நிஜம் கசியாத கவிதை*

 

சிறுவனாகப்

பென்சில் சீவும்போது

கசிந்த ரத்தம்

உண்மையாக இருந்தது.

 

இப்போது ஜாக்கிரதை உணர்வு

வந்துவிட்டது வயதுடன்.

 

எஞ்சியது என்ன?

காயம் படாத கை விரல்.

நிஜம் கசியாத கவிதை..!

 

*கல்யாண்ஜி*


No comments:

Post a Comment