எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 3 November 2020

படித்ததில் பிடித்தவை (“3 கி.மீ.” – இசை கவிதை)

 


*3 கி.மீ.*

 

அந்த ஊருக்கு

இந்த வழியே

3 கி.மீ. எனக் காட்டிக் கொண்டு

நிற்கும்

கைகாட்டி மரத்திற்கு

அவ்வூரைப் பார்க்கும்

ஆசை வந்துவிட்டது ஒருநாள்..!

 

வாஞ்சை கொண்டு

கிளம்பிய மரம்

நடையாய்

நடந்து கொண்டிருக்க

3 கி.மீ.  3 கி்.மீ. எனத்

தன்னை பின்னோக்கி

இழுத்துக் கொள்கிறது

அவ்வூர்..!

 

*இசை () ஆ.சத்யமூர்த்தி*

2 comments:

  1. ஸ்ரீராம்3 November 2020 at 17:48

    நுணுக்கமான கவிதை.

    ReplyDelete
  2. Good imagination.

    ReplyDelete