எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 31 May 2020

படித்ததில் பிடித்தவை (“நினைவோ ஒரு பறவை” – சிவா கவிதை)


 *நினைவோ ஒரு பறவை*

அந்த இறுதி சந்திப்புக்குப் பிறகு
உறுதி செய்துகொண்டேன்
உன்னைப்பற்றிய நினைவுகளை
என்னை மறந்தும் எண்ணிப் பார்ப்பதில்லையென

இருந்தும்
பெருமழை விட்டப் பிறகான
பராமரிப்பில்லா தெருவைப்போல
நினைவுநீர் குட்டைகள்
மனமெங்கும் தேங்கி நிற்கிறது...
ஆனால் எதிலும் கால் பதிக்க துணிவில்லை
ஏதோ ஒரு குட்டையின் ஆழம்
என்னை உள்ளிழுத்துவிடுமோ என..!”   

               *சிவா*

No comments:

Post a Comment